/* */

கரூர் தொழில்பேட்டை கல்யாண சுப்ரமண்யர் ஆலயத்தில் காவடி பூஜை

கரூர் அருகே தொழில்பேட்டை ஸ்ரீ கல்யாண சுப்ரமண்யர் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி பூஜை மற்றும் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூர் தொழில்பேட்டை கல்யாண சுப்ரமண்யர் ஆலயத்தில் காவடி பூஜை
X

தொழில்பேட்டை கல்யாண சுப்ரமணியர்.

கரூர், தொழில்பேட்டை கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் பழனி பாதயாத்திரை சென்று வந்த முத்திரைக் காவடிக்கு பல்வேறு அபிஷேகம் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, கல்யாண சுப்ரமண்யருக்கும் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கரூர் திருக்குறள் பேரவை செயலர் மேலை பழநியப்பன், சஷ்டி குழு ஆனிலை பாலமுருகன், ஆவண ஆலோசகரும், ஆன்மீகச் செம்மலுமான கார்த்திகேயன், கார்த்தி, தர்மர், கோபால் சேட்டு, யோகா வையாபுரி தாடிக்கொம்பு காவடிக் குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி முடிவில் ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஆலயத்திற்குள் காவடி வைக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டு முருகன் அருள் பெற்றனர்.

Updated On: 18 Jan 2022 6:34 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  6. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  9. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  10. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...