Begin typing your search above and press return to search.
கரூர் தொழில்பேட்டை கல்யாண சுப்ரமண்யர் ஆலயத்தில் காவடி பூஜை
கரூர் அருகே தொழில்பேட்டை ஸ்ரீ கல்யாண சுப்ரமண்யர் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி பூஜை மற்றும் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
கரூர், தொழில்பேட்டை கல்யாண சுப்ரமணியர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் பழனி பாதயாத்திரை சென்று வந்த முத்திரைக் காவடிக்கு பல்வேறு அபிஷேகம் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, கல்யாண சுப்ரமண்யருக்கும் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கரூர் திருக்குறள் பேரவை செயலர் மேலை பழநியப்பன், சஷ்டி குழு ஆனிலை பாலமுருகன், ஆவண ஆலோசகரும், ஆன்மீகச் செம்மலுமான கார்த்திகேயன், கார்த்தி, தர்மர், கோபால் சேட்டு, யோகா வையாபுரி தாடிக்கொம்பு காவடிக் குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி முடிவில் ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஆலயத்திற்குள் காவடி வைக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டு முருகன் அருள் பெற்றனர்.