/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் எம்பி ஜோதிமணி தலைமையில் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் எம்பி ஜோதிமணி தலைமையில் சைக்கிள் பேரணி
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் எம்பி ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

கரூர்:

கரூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான கண்டன இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஜோதிமணி எம்.பி. சைக்கிளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றார்.

பெட்ரோல், டீசல் உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சைக்கிள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இதையொட்டி, கரூர் பேருந்து நிலைய பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்பி ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் ஜோதிமணி சைக்கிளை ஒட்டியவாறு கரூரின் முக்கிய கடைவீதி வழியாக சென்றார். கூடவே காங்கிரஸ் கட்சியினரும் சைக்கிளில் சென்றனர். முக்கிய கடைவீதிகளில் சென்ற பேரணி மீண்டும் பேருந்து நிலையப் பகுதியில் நிறைவடைந்தது.

பேருந்து நிலைய பகுதியில் எம்பி ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

Updated On: 12 July 2021 8:28 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...