பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் எம்பி ஜோதிமணி தலைமையில் சைக்கிள் பேரணி
கரூர்:
கரூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான கண்டன இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஜோதிமணி எம்.பி. சைக்கிளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றார்.
பெட்ரோல், டீசல் உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சைக்கிள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இதையொட்டி, கரூர் பேருந்து நிலைய பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்பி ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் ஜோதிமணி சைக்கிளை ஒட்டியவாறு கரூரின் முக்கிய கடைவீதி வழியாக சென்றார். கூடவே காங்கிரஸ் கட்சியினரும் சைக்கிளில் சென்றனர். முக்கிய கடைவீதிகளில் சென்ற பேரணி மீண்டும் பேருந்து நிலையப் பகுதியில் நிறைவடைந்தது.
பேருந்து நிலைய பகுதியில் எம்பி ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.