/* */

குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாடி ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் ஆதரவற்ற குழந்தைகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாடி ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சி
X

ஓணம் பண்டிகை கொண்டாடிய ஆதரவற்ற குழந்தைகள்.

கேரளா மக்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிக முக்கியமானதாக அமைகிறது ஓணம் பண்டிகை, கானம் விற்றாகிலும் ஓணம் கொண்டாடு என்பது பழமொழி அதாவது கால் நிலம் இருந்தாலும் அதனை விற்றாவது ஓணம் கொண்டாடு என்பது பொருள்.

அந்த அளவிற்கு ஓணம் பண்டிகைக்கு கேரளா மக்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் முந்தைய மன்னர் காலத்தில் கேரளாவின் ஒரு பகுதியாக அமைந்து இருந்த கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக ஓணம் கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் பலர் தங்கள் வீடுகளில் எளிய முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் அமைந்துள்ள பால மந்திர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புத்தாடைகள் அணிந்து இனிப்புகளுடன் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் ஊஞ்சல் ஆடி நடைபெற்ற இந்த ஓணம் விழாவில் குழந்தைகளுடன் அந்த பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On: 21 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு