Begin typing your search above and press return to search.
குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 6 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு
குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 6 பேர் மீது போலீசார் நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் என அனைவர் மீதும் நன்னடத்தை பிணை வழக்குகள் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகளின் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று குமரியில் 6 நபர்களுக்கு பிணை நிறைவேற்றபட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.