/* */

கனமழையால் உள்வாங்கிய நடைபாதை: தரமற்ற பணிகளால் பல லட்சம் வீண்

அய்யம்பேட்டையில் ஊராட்சியில் தரமற்ற பணிகளால் குளத்தின் நடைபாதை உள்வாங்கியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கனமழையால் உள்வாங்கிய நடைபாதை: தரமற்ற பணிகளால் பல லட்சம் வீண்
X

தரமற்ற பணிகளால் சேதமடைந்த ஐயம் பேட்டை குளம்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குபட்ட ஐயம்பேட்டை ஊராட்சி மாநில சாலையோரம் அமைந்துள்ள குளத்தை புணரமைக்க காஞ்சிபுரம் ஊராட்சி முகமை சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 2020-2021 கீழ் ரூ.21.37 லட்சம் மதிப்பில் புணரமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்றது.

குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பவர் பிளாக் நடைபாதை, குளத்தை ஆழப்படுத்தும், காம்பவுண்ட் வேலி உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

குறுகிய சில மாதங்களிலேயே தரமற்ற பணிகளால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக நடைபாதை உள்வாங்கி கான்கீரிட் சுவர் விரிசல் அடைந்தது.

இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பணிகளை முறையாக கவனிக்காததால் ஊராட்சி முகமைக்கு பெருத்த பண விரயமும், பொதுமக்களிடையே அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. இக்குளம் ஏற்கனவே 2019 குடிமராமரத்து பணியின் கீழ் பல ஆயிரம் செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு