/* */

காஞ்சிபுரம் : 20வது மெகா தடுப்பூசி முகாம் 395 இடங்களில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 395 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : 20வது மெகா தடுப்பூசி முகாம் 395 இடங்களில் நடைபெறுகிறது.
X

காட்சி படம் 

கொரோனா மற்றும் அதைச் சார்ந்த ஓமிக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை 20வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன் கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8,739 பேர் உள்ளனர். இதுவரை 3,431 பேர் மட்டுமே (36%) தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (81%) இலக்கையே எட்டியுள்ளது.

கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 28 நாட்கள் , கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 84 நாட்கள் இதுவரை 1,97,789 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள முடியும் என இந்திய மருத்துவக்கழகம் அறிவித்துள்ளது.

எனவே நாளை நடைபெற உள்ள 20 ஆவது மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் பயன்பெற உன் இதற்காக 395 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

Updated On: 28 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  5. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  6. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை