Begin typing your search above and press return to search.
ஊரடங்கில் பணிமனை பராமரிப்பு
ஊரடங்கில், காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் மரம் நடுதல், வளாகத்தினை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் தொழிலாளர்கள்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை அருகே அமைந்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை. இங்கிருந்து 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது.
தற்போது பொது முடக்கம் காரணமாக பேருந்துகள் இயக்கம் தடை செய்யப்பட்டு பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது பணிமனை பராமரிக்க திட்டமிட்டு, பணிமனை வளாகம் முழுவதும் சுத்தம் செய்தல் , மரம் நடுதல் , சுகாதார பணிகள் என பல பணிகளில் நாள்தோறும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் பணிமனை முழுதும் சுற்றுச்சூழல் வளாகமாக திகழும் எனவும் தங்களது பணி இல்லாத காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது உடல் வலிமைக்கும், மன வலிமைக்கும் நன்மை பயப்பதாக போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்