/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

பைல் படம்

காஞ்சி மண்டல சரக டிஐஜி எம்.சத்யபிரியா காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகருக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாகவே மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பல நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவ்வகையில் இன்று உத்திரமேரூர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகளான வசீகரன், சரன்ராஜ் மற்றும் நிஷாந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரகு மற்றும் பிரஷாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 110 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நன்னடத்தையுடன் செயல்பட சூர்யா மற்றும் கணேஷ் ஆகியோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 30 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு