/* */

காஞ்சிபுரத்தில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட மூன்று தம்பதிகள் வெற்றி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக அதிமுக சார்பில் போட்டியிட்ட மூன்று கணவன், மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் மனோகரனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி சரஸ்வதி மனோகரனும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் தேர்தலில் வெற்றியும் பெற்றனர்.

குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த மாலதி இயேசுபாதம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது கணவர் இயேசு பாதமும் போட்டியிட்டனர் போட்டியிட்ட இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

அதுபோல ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுகவைச்சேர்ந்த தமிழ் அமுதன் போட்டியிட்டார். 12வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி மலர்விழி தமிழ் அமுதனும் போட்டியிட்டார். போட்டியிட்ட இருவரும் வெற்றியும் பெற்றனர். குன்றத்தூர் ஒன்றிய திமுக சார்பில் இரண்டு தம்பதியினரும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரு தம்பதியினரும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Oct 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது