/* */

பவானிசாகர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பவானிசாகர் அருகே விபத்தில் கண் பார்வை இழந்த வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பவானிசாகர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் . இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், நவீன் குமார் (வயது 27) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக ஈரோடு பவானிசாகர் மாவட்டம் அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தில் கோவிந்தராஜன் என்பவரின் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து நாகராஜன் விவசாயம் செய்து வந்தார். அவருடன் அவரது மகன் நவீன் குமாரும் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் நவீன் குமாருக்கு இடது கண் பார்வை முற்றிலும் பறி போய்விட்டது. வலது கண் பார்வை மட்டும் சுமாராக இருந்து வந்தது. நவீன் குமார் அடிக்கடி பார்வை பறிபோனதை எண்ணி வருத்தப்பட்டு வந்தார்.

இனிமேல் நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று கூறி வருத்தப்பட்டு வந்தார். அவரை அவரது பெற்றோர் ஆறுதல் படுத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து நவீன்குமார் குடித்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் கோவையில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!