/* */

பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: பெண் பலி

பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: பெண் பலி
X

மரத்தில் மோதிய கார்.

திருப்பூர் மாவட்டம் பத்மினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் பண்ருட்டி அருகே உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு காரில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காரனது பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், பகலாயூர் பகுதியில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி, ரோட்டோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த சண்முகசுந்தரம், சுஜாதா, சுரேஷ், ஹஸ்வந்தன் ஆகியோர் தலை மற்றும் உடலில் அடிபட்ட நிலையில், பெருந்துறை தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 7 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  2. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  5. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  6. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  7. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  8. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...