/* */

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

பெருந்துறை அருகே அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் துடுப்பதி பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் பள்ளிகாட்டூரை பகுதியில் சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முத்துக்களத்தூரை சேர்ந்த குமரேசன் (வயது 28) மற்றொரு நபர் பெருந்துறை கருக்கம்பாளையத்தை சேர்ந்த கவுதம் (வயது 21) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது 98 மது பாட்டில்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 4 மதுபாட்டில்கள் எரிசாராயம் கலந்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 4 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...