/* */

கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஆரியங்காட்டு பாலத்தில் தேங்கிய நீரால் கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு
X

நீரில் மூழ்கிய பேருந்தை தள்ளும் பயணிகள்.

ஈரோட்டிலிருந்து கணபதிபாளையம் வழியாக கரூர் செல்லும் சாலையில் சின்னம்மாபுரம் அருகே அமைந்துள்ள ஆரியங்காட்டு ரயில்வே நுழைவுபாலம். ஈரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த நுழைவு பாலத்தின் கீழ் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த சாலையி்ல் இருசக்கரவாகனங்களும், கார்களும் செல்லமுடியாத நிலை உருவானது.

இந்த நிலையி்ல் கரூரிலிருந்து பயணிகளுடன் ஈரோட்டை நோக்கி வந்த பேருந்து ஒன்று அந்த நீரில் சிக்கிக்கொண்டது. இதனால் பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி அந்த பேருந்தை தள்ளி அதனை வெள்ளநீரிலிருந்து மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலத்தில் நீர்தேங்கி போக்குவரத்து தடைபட்டதால் அந்த வழியேயான போக்குவரத்து மொடக்குறிச்சி நோக்கி திருப்பி விடப்பட்டது. மேலும், பாலத்தின் அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Updated On: 4 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  5. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  6. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  7. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  8. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...