Begin typing your search above and press return to search.
போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைதான அரச்சலூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த, 10-ம் வகுப்பு மாணவியை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக, கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூரை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 19) என்பரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில், ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், சங்கரநாராயணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார்.