Begin typing your search above and press return to search.
நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
நம்பியூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள மெட்டுக்கடை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய, கோபி, குருமந்தூரை சேர்ந்த கார்த்தி (வயது 42), பழனிகவுண்டன்பாளையம் சத்யாநகர் காலனியை சேர்ந்த சின்ராசு (வயது 42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்து, மாவட்ட மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.