/* */

சத்தியமங்கலம் அருகே மின் இணைப்புக்கு ரூ.6,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியர்கள் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே மின் இணைப்புக்கு ரூ.6,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியர்கள் கைது
X

மின்வாரிய ஊழியர்கள் சண்முகம், பாலசுப்ரமணியம்.

சத்தியமங்கலம் அருகே மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாரதி (வயது 42). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கட்டியுள்ள வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெற சிக்கரசம்பாளையம் இளம் மின் பொறியாளர் அலுவலகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் போர்மேன் சண்முகம், மின் பாதை ஆய்வாளர் பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் அருண்பாரதியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அருண்பாரதி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, சிக்கரசம்பாளையம் இளம் மின் பொறியாளர் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு துறை மூலம் கொடுக்கப்பட்ட ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் அருண் பாரதி சென்றார். அங்கு மின் வாரிய ஊழியர்கள் சண்முகம், பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் பணத்தை கொடுத்தார். அதை சண்முகம், பால சுப்ரமணியம் ஆகியோர் பெற்றபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீ சார் கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து 2 பேரையும் ஈரோட்டுக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகிறனர். லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Jan 2024 4:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை