/* */

உக்ரைனில் படிக்கும் அந்தியூர் மாணவியை இந்தியாவுக்கு அழைத்து வர கோரிக்கை

உக்ரைனில் அந்தியூரை சேர்ந்த மருத்துவ மாணவி உட்பட பலர் தவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

உக்ரைனில் படிக்கும் அந்தியூர் மாணவியை இந்தியாவுக்கு அழைத்து வர கோரிக்கை
X

மாணவி மௌனி சுகிதா.

உக்ரைனில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த மருத்துவ மாணவி உட்பட பலர் தவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு தங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதையடுத்து, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலிருந்து மருத்துவம் படிக்க உக்ரைன் சென்ற மாணவ மாணவிகள் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகள் மெளனி சுகிதா, உக்ரைனில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ மாணவி மௌனி சுகிதாவின் பெற்றோர்கள், அவர்களை இந்தியா அழைத்து வர, மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி, மருத்துவ மாணவி மௌனி சுகிதா, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அங்குள்ள நிலைமை பற்றியும் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

Updated On: 24 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...