/* */

பவானி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்- டிரைவர் தப்பி ஓட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்- டிரைவர் தப்பி ஓட்டம்
X

பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசி.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தார் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் சோதனையின்போது ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து சரக்கு வாகனம் மற்றும் வாகனத்தில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மாவட்ட குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தப்பியோடிய ஓட்டுனரை பவானி போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பவானி சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. எனவே தனிப்படை அமைத்து கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Jun 2022 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!