/* */

வடிகால், சாலை பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 10 நாள் கெடு கொடுத்த எம்எல்ஏ

பெருந்துறை பழைய பஸ் நிலைய பகுதியில் நடைபெறும் வடிகால், சாலை பணிகளை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என எம்எல்ஏ உத்தரவு.

HIGHLIGHTS

வடிகால், சாலை பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 10 நாள் கெடு கொடுத்த  எம்எல்ஏ
X

பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் எம்எல்ஏ ஜெயக்குமார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் தார் சாலை மற்றும் வடிகால் பணி முடிக்க படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று பெய்த மழையால் அப்பகுதியலில் உள்ள மார்க்கெட் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து இன்று பெருந்துறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது எம்எல்ஏ ஜெயகுமாரிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கூறும் போது, பழைய பஸ் நிலையம் முதல் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா வரை வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணி நீண்ட காலமாக மெதுவாக நடைபெற்று வருகிறது. தற்போது வடிகால் மூடி வைக்கப்பட்ட நிலையில் அங்கு பெய்த கன மழையால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் இப்பணிகள் நடைபெறும் காலங்களில் கடைகள் மூடப்பட்ட போதிலும் பேரூராட்சி மூலம் வாடகை வசூல் செய்வது வருவதாக கூறிய அவர்கள் பணிகள் முற்றிலும் முடியும் வரை வாடகைக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் பேரூராட்சி அதிகாரிகளிடமும் பேசிய எம்எல்ஏ ஜெயகுமார், அடுத்த பத்து நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என உத்தரவிட்டதோடு இந்த பணி நடைபெற்ற காலங்களில் இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூல் செய்யக்கூடாது எனவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

பின்னர் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட செட்டி தோப்பு பகுதியில் மழை நீர் தேங்கி இருந்த இடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும் ஜீவா நகர் பகுதியில் மழைநீர் தேங்கி வெளியேற்றும் பாதையை பார்வையிட்டார். பவானி சாலையில் உள்ள சுபாஷ்சந்திரபோஸ் வீதியில் மூடப்படாமல் உள்ள வடிகாலுக்கு காங்கிரீட் மூடி அமைக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

Updated On: 9 Aug 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!