/* */

ஈரோட்டில் தாயமங்கை விளையாட்டு போட்டி

ஈரோட்டில் தாயமங்கை விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில்  தாயமங்கை விளையாட்டு போட்டி
X

தாயமங்கை போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோட்டில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு ஜேசிஐ எலைட், ஸ்ரீ சிகரம் ஆடைகள் மற்றும் ஈரோடு அகாடமி இணைந்து நடத்திய தாயமங்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

போட்டியை ஜேசிஐ எலைட் முன்னாள் தலைவர் தீபக் தொடங்கி வைத்தார். ஜேசிஐ எலைட் தலைவர் கே.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் ஏழு வயது முதல் 70 வயது உள்ள பெண்கள் மேற்பட்டோர் பங்கேற்று தாயக்கரம் விளையாடினார்கள். நடுவராக ரம்யா பங்கேற்றார்.

இதில் நான்கு சுற்றுகள் விளையாடப்பட்டது. இதில், வெற்றி பெற்ற இரண்டு நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் இரண்டாயிரமும், இரண்டாம் பரிசாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் இரண்டு பேருக்கும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் இரண்டு நபர்களுக்கும், ஆறுதல் பரிசாக கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்பட்டது.

பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், ஜேசிஐ எலைட் மகளிர் அணி மண்டல இயக்குனர் டாக்டர் ஷர்மிளா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Updated On: 11 Sep 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  3. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  4. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  7. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  9. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  10. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு