Begin typing your search above and press return to search.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம்
கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம் நடைபெற்றது.முகாமில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், காலாவதியான அட்டை புதுப்பித்தல், வருவாய் துறையின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், சுயதொழில் செய்ய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் பெற விண்ணப்பித்தல், சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.