/* */

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் ஏமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக தொடரும் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக  தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் ஏமாற்றம்
X

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் போடப்பட்டு வந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 56 இடங்களிலும் என மொத்தம் 66 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், அவர்கள் சிரமமின்றி தடுப்பூசி போடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் போடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வார்டுகள் வீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைப்போல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திங்கட்கிழமை தடுப்பூசி வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தடுப்பூசிகள் வரவில்லை. அதனை தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்றும் தடுப்பூசிகள் வராமல் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Updated On: 6 July 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...