Begin typing your search above and press return to search.
சத்தியமங்கலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி
சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். வனப்பகுதியை ஒட்டி உள்ள காலி இடத்தில், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ஒரு ஆடு மட்டும் திரும்பவில்லை. இதனையடுத்து, மேய்ச்சல் பகுதிக்கு சென்று பார்த்தபோது ஆடு இறந்து கிடந்தது..
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதில், பதிவாகி இருந்த கால் தடம் சிறுத்தையுடையது என கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் சிறுத்தைப்புலினை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.