/* */

ஈரோடு: 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 12-14 வயதுடைய 66 ஆயிரத்து 300 சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

ஈரோடு: 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்
X

இன்று அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட போது எடுத்த படம்

தமிழகத்தில் 12 முதல் 14 வயது உடைய சிறார்களுக்கு, இன்று முதல் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில், 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இன்று முதல், தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல் தினமும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் செலுத்தப்பட்டு வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டு சிலமணி நேரம் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தனர். 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  5. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  6. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  7. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  8. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  9. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  10. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...