/* */

சிறுமியிடம் சில்மிசம் : போலீசுக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான போலீசுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

சிறுமியிடம் சில்மிசம் : போலீசுக்கு  5 ஆண்டு சிறை
X

ஜார்கண்ட் மாநிலம் டோராடூன் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அதே ரயிலில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் ஊதியர் காவல்நிலைய போலீஸ் ஜெகன் என்பவர் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறி அச்சிறுமியின் பெற்றோர் ஈரோடு ரயில்நிலைய காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.


புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் போலீஸ் ஜெகனை கைது செய்தனர்.

ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் போலீஸ் ஜெகனுக்கு 5 ஆண்டு சிறை சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மாலதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 17 April 2021 5:38 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை