/* */

தபால் ஓட்டுக்கான சீட்டு அனுப்பும் பணி துவக்கம்

தபால் ஓட்டுக்கான சீட்டுகள் பிரிக்கும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

தபால் ஓட்டுக்கான சீட்டு  அனுப்பும் பணி துவக்கம்
X

ஈரோடு மேற்கு தொகுதியில் தபால் ஓட்டுக்கான சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் இவர்களுக்கு தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைத்து ஈரோடு மேற்குத் தொகுதியில் தபால் ஓட்டு போடுபவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது. நாளை ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 13,160 ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது.

அந்தந்த தொகுதியில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஒரு பெட்டி வைக்கப்படும். அதில் அவர்கள் தபால் ஓட்டினை பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஓட்டு போட முடியாதவர்கள் மூன்றாம் கட்டமாக தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த பணியை மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓ.வுமான சைபுதீன் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் தபால் ஓட்டு சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

Updated On: 26 March 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்