/* */

சிறுமிக்கு ‌பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

6 வயது சிறுமிக்கு ‌பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

ஈரோடு, கலைமகள் வீதியை சேர்ந்தவர் கோடீஸ்வரர். இவர் எண்ணெய் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கோடீஸ்வரரை கைது செய்தனர். இந்த வழக்கானது ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையில் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட கோடீஸ்வரர் மீது புகார் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 35ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 10 May 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!