/* */

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Erode news, Erode news today- பங்களாப்புதூர் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

Erode news, Erode news today- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதுார் அண்ணாநகர் பகுதியில் பணம் வைத்து சீட்டு சூதாடுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அண்ணாநகர் எருமைக்குட்டை பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்ததை பார்த்தனர். இதனால் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் (வயது 47),சிவானந்தன் (47), தசரதன் (47) உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,440 ரூபாய் ரொக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுகட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

விஷ பூச்சி கடித்து வாலிபர் சாவு

ஒடிசா மாநிலம் பவுத்தமோதார்புர் பகுதியை சேர்ந்தவர் பிப்பிந்தரா மகன் பிகாஸ் (20). இவர், ஈரோடு கஸ்பாபேட்டையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி பிகாஸின் வலது கையில் ஏதோ விஷப்பூச்சி கடித்துள்ளது. இதனால் அவரது கை முழுவதும் வீங்கி, வலியால் அலறி துடித்தார். இதைத் தொடர்ந்து, 4ம் தேதி மயக்கம் அடைவதை போல் உணர்ந்த பிகாஸ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு தாலுாகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகிரி அண்ணாமலைபாளையத்தை சேர்ந்த துரைசாமி மகன் ரகுபதி (32). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில், கடந்த மாதம் 27ம் தேதி கடுமையான வயிற்று வலி காரணமாக வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது மனைவி ரேவதி, ரகுபதியின் அண்ணன் பாலுச்சாமி உதவியுடன் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரகுபதி உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்றவர் கைது

தாளவாடி அருகே மெட்டலவாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் இருந்த சாக்கு மூட்டையில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக்களை வைத்திருந்த சாம்ராஜ்நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 220 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 6 Dec 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...