Begin typing your search above and press return to search.
வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
பெருந்துறை பட்டகாரம்பாளையத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் பட்டக்காரம்பாளையத்தில் 150க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வரும் அவல நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 50 க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.