/* */

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல்

ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல்
X

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர்.சகாதேவன், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ஈரோட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலனுக்காக ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைத்து ஈரோட்டின் மையப்பகுதிகளான வீரப்பன்சத்திரம், பெரிய அக்ரஹாரம், திருநகர் காலனி மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய 4 இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்துள்ளது.

இந்த நீர்மோர் பந்தலை ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர்.சகாதேவன், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர். இதில், ரோட்டரி முன்னாள் ஆளுநர் சிவசங்கரன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கமலநாதன், செயலாளர் விக்னேஷ்குமார், பொருளாளர் சுரேஷ், ஆத்மா அறக்கட்டளையின் செயலாளர் ராஜ மாணிக்கம், பொருளாளர் சரவணன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், தொடர்ந்து 30 நாட்களுக்கு வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கட்டாயம் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 4 May 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!