/* */

நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு
X

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். வரும் பிப்ரவரி 27ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி, அங்கு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஓய்கிறது.

அனுமதி அளிக்கப்பட்ட 107 தேர்தல் பணிமனைகளை நாளை மாலைக்குள் கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும். வெளி மாவட்டங்களை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் நாளை மாலை 5 மணியுடன் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்தார். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு மட்டுமின்றி வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பரிசுப்பொருட்கள் அளித்ததாக 2 வழக்குகள் பதிந்துள்ளோம். பரிசுப்பொருட்கள் குறித்த புகார்கள் தொடர்பாக விசாரிக்கிறோம். அதிகாரபூர்வ குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறோம், எனவும் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

Updated On: 24 Feb 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....