/* */

ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க தடை

ஈரோட்டில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தடை விதித்துள்ளார்.

HIGHLIGHTS

ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க தடை
X

பைல் படம்.

ஈரோட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி, ஈரோடு மாவட்ட காவல் எல்லையில் நாளை (30ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (31ம் தேதி) ஆகிய நாட்களில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (30ம் தேதி) சனிக்கிழமையன்று ஈரோடு மாவட்டம் வருகை புரிந்து நாளை மறுநாள் (31ம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலைய சரகம் சின்னியம்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

தமிழக முதல்வரின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, ஈரோடு மாவட்ட காவல் எல்லையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் எவ்வித ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2024 12:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!