Begin typing your search above and press return to search.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் குளித்த மாற்றுத்திறனாளி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காசிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 52) மாற்றுத்திறனாளி என்பதும், அவர் வாய்க்காலில் இறங்கி குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.