/* */

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவையொட்டி தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு
X

தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

பிரபல கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள தொட்டகாஜனூர் கிராமம் ஆகும். ராஜ்குமார் பிறந்த வளர்ந்து ஊரான தொட்டகாஜனூரில் அவருடைய குடும்பத்தினர் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவரும் பிரபல கன்னட நடிகர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். இதைத்தொடர்ந்து தொட்டகாஜனூரில் உள்ள நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தாளவாடியில் உள்ள புனித் ராஜ்குமார் ரசிகர்கள் ஆங்காங்கே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தாளவாடி பஸ் நிலையம், தொட்டகாஜனூர் சாலை, சாம்ராஜ் நகர் ரோடு ஆகிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 31 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்