/* */

ஆதிதிராவிடர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்க கோரி மனு

சிக்கரசம்பாளையத்தில் ஆதிதிராவிடர்கள் குடும்பத்தினருடன் தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வருபவர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்கோரி மனு.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்க கோரி மனு
X

சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கர் இடம் மனு அளிக்கும் எம்எல்ஏ பண்ணாரி. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டவர்த்தி, அய்யம்பாளையம், லட்சுமிபுரம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்கள் தங்களது குடும்பத்தினருடன் தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் சொந்தமாக இடம் ஒதுக்கி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி அரசுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருந்ததை கண்டறிந்து அந்த நிலத்தில் சிக்கரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டுமென சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கர் இடம் மனு அளித்தார். மனுவை ஏற்றுக் கொண்ட வட்டாட்சியர் ரவிசங்கர் இதுகுறித்து ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கோபால்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 15 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...