/* */

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி

சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை சிறுத்தை புலி அடித்து கொன்றதில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி
X

பலியான ஆடுகள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருக்கு சொந்தமான நிலம் பெரியகுளம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தில் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி உள்ள காலி இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆடு , மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு ஆடுகள் திரும்பவில்லை. இதனையடுத்து மேய்ச்சல் பகுதிக்கு சென்று பார்த்தபோது இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பதிவாகி இருந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடம் என கண்டுபிடித்தனர். வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் ஆடு, மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தையானது, இரண்டு ஆடுகளளை அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 17 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்