/* */

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை

பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் தண்ணீர் தேடி வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பவானிசாகர் அணை பூங்காவின் அருகே உள்ள புங்கார் கிராம குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொது மக்கள் டார்ச் லைட் அடித்தும் சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டினர். இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கோடை காலம் நெருங்கி வரும் வேளையில் வனப்பகுதிக்குள் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பினால் யானைகள் வெளியே வருவதை தடுக்கலாம் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 22 March 2021 4:42 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  2. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  3. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  6. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  10. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!