/* */

பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: பவானியில் இளைஞர்கள் அமைப்பு தொடக்கம்

பவானியில், ‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற அடிப்படையில், பொதுநல அமைப்பு இளைஞர்கள் சார்பில் , 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனை எதிரில், பவானி பொதுநல அமைப்பு இளைஞர்கள் சார்பில், பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானி ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஏற்பாட்டின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு, உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைப்பினர் கூறுகையில், கொரானா காலத்தில் உணவின் தேவை அறிந்து ஏழைகள் பயன்பெறும் வகையில், 300 பேருக்கு இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. உணவை யாரும் வீணாக்க வேண்டாம். தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், ஆண்டிக்குளம் பஞ்சாயத்து தலைவர் பத்மா விசுவநாதன், மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!