/* */

ஆம்புலன்ஸில் பிரசவம்:பெண் குழந்தை பிறந்தது

பர்கூர் மலைப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் கூலித் தொழிலாளிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

HIGHLIGHTS

ஆம்புலன்ஸில் பிரசவம்:பெண் குழந்தை பிறந்தது
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்கரை அருகே உள்ள சின்ன செங்குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கெஞ்சன். இவரது மனைவி ரோஜா. நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது கணவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ரோஜாவை அழைத்துக் கொண்டு மலைப்பாதை வழியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர். ஒன்னகரை என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது ரோஜாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் சிவா பிரசவம் பார்த்ததில் ரோஜாவிற்கு ஆம்புலன்ஸிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாயும் சேயும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பூரண நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.

Updated On: 24 Jan 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?