/* */

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை கிராம மக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.

HIGHLIGHTS

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம்
X

வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை.

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை கிராம மக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.

ஈரோடு மாவட்டம், கோபி கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை கிராம வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சஞ்சீவராயன் குளம் அருகேயுள்ள மணி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை புகுந்தது. சுமார் ஒன்றரை ஏக்கரில் கரும்பு விளைவித்து இருந்த விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. வாழை மரங்களை யானை சேதப்படுத்துவதை அறிந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், சத்தமிட்டவாறும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதாக கூறப்படுகிறது.


அப்போது யானை வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அடிக்கடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அந்தியூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அந்தியூர் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 18 Nov 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  6. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  8. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...