Begin typing your search above and press return to search.
அத்தாணியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், அத்தாணி கருப்பகவுண்டன்புதூரை சேர்நதவர் சக்திவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). நேற்று முன்தினம் மதியம் சக்திவேல் வெளியே சென்ற நிலையில், விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர், வீட்டில் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.