/* */

பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பங்களாப்புதூர் அருகே உள்ள டி.ஜி.புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்த போலீசார் ரூ.5,080 பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
X
பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது டி.ஜி.புதூர் ஜம்பள்ளம் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊட்டி தூத்தூர்தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி 47, ஏளூர் பகுதியை சேர்ந்த கோபால் 38, காளியூரை சேர்ந்த செல்வராஜ் 38, பெரிய கொடிவேரியை சேர்ந்த குருஷ்விக்னேஷ்வர் என்கிற ரோஜர் 28,‌ பரமேஸ்வரன் 43, ரமேஷ் 42 ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 80 ரூபாயை கைப்பற்றினர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Jun 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!