/* */

வெள்ளோடு அருகே ரூ.2.67 லட்சம் நகைகள் கொள்ளை

வெள்ளோடு அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

வெள்ளோடு அருகே ரூ.2.67 லட்சம் நகைகள் கொள்ளை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அடுத்த முகாசி அனுமன்பள்ளி, இந்திரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயியான இவருக்கு மனைவி சரோஜா, 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஈரோட்டில் வசித்து வருகின்றனர். பொன்னுசாமியும், சரோஜாவும் தனியாக வசித்து வந்தனர்.

பொன்னுசாமியும், அவரது மனைவி சரோஜாவும் தங்களது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் காரில் சென்று விட்டு மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் வெளிப்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோக்களை சாவி மூலம் திறந்து அதிலிருந்த ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 4 ஜோடி தங்க கம்மல், ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான தங்க காசு மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டில் பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். இது குறித்து பொன்னுசாமி வெள்ளோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Sep 2023 7:17 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...