/* */

கடத்தூரில் செல்போன் டவரில், சென்னை லாரி டிரைவர் தற்கொலை முயற்சி

சென்னையை சேர்ந்தவர் கடத்தூரில் செல்போன் டவரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை முயற்சி

HIGHLIGHTS

கடத்தூரில் செல்போன் டவரில், சென்னை லாரி டிரைவர் தற்கொலை முயற்சி
X

தற்கொலை முயற்சி மேற்கொண்ட சென்னையை சேர்ந்த துரைராஜ்.

சென்னை, பல்லாவரம் காமராஜர்புரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் துரைராஜ் (வயது 36. )லாரி டிரைவர். இவர் சில தினங்களுக்கு முன், சென்னையில் லாரி ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இவரின் ஓட்டுநர் உரிமத்தை விருகம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, சென்னையிலிருந்து இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். கடத்தூர் வந்ததும் அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, கடத்தூர் போலீசார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அப்போது, சென்னை போலீசார் ஓட்டுநர் உரிமம் பெற இதுவரை ரூ. 20 ஆயிரம் கொடுத்துள்ளதாகவும், மேலும் ஐந்தாயிரம் கேட்டு தொல்லை செய்வதாக கூறினார்.

பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 30 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?