/* */

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: போலீசார் விசாரணை

பாலக்கோடு அருகே விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை பார்க்க சென்றபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி வாணியர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் வசந்தகுமார் வயது 14. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் அப்பகுதியில் உள்ள செவத்தாம் பட்டி பனைமரத்து ஏரிக்கு சென்றுள்ளார். இவருடன் அவரது நான்கு நண்பர்களும் சென்றுள்ளனர். அங்கு விநாயகர் சிலை கரைக்க போகும் இடத்தை பார்க்க முற்பட்டபோது எதிர்பாரதவிதமாக வசந்தகுமார் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் மாரண்டஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 2:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!