/* */

அரூர்: தக்காளி விலை வீழ்ச்சியால் மீனுக்கு போடும் அவலம்.!

விலை குறைவால் பாப்பாரப்படி பகுதிகளில் தக்காளியை பறிக்காமல் விவசாயிகள் தோட்டத்திலேயே விட்டுவிட்டனர்.

HIGHLIGHTS

அரூர்: தக்காளி விலை வீழ்ச்சியால் மீனுக்கு போடும் அவலம்.!
X

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், ஒரு கிலோ தக்காளி 2 முதல் 3 ரூபாய் விற்கப்படுகிறது. விலை குறைவால் மீனுக்கு உணவாக போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, இண்டூர், பாப்பாரப்பட்டி, சோமனஅள்ளி, பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று அரூர் பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் 27 கிலோ கொண்ட பெட்டி ரூ.75 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் கம்பைநல்லூர், பாலவாடி, பாப்பாரப்படி பகுதிகளில் தக்காளியை பறிக்காமல் விவசாயிகள் தோட்டத்திலேயே விட்டுவிட்டனர்.

அதே போன்று தக்காளி கிலோ 3 ரூபாய் விற்கப்படுவதால், ஏரிகளில் வளர்க்கப்படும் மீனுக்கு உணவாக அளித்து வருகின்றனர். சிலர் தக்காளியை சாலைகளில் வீசிவிட்டு செல்லும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கர் தக்காளி பயிர் செய்தால் குறைந்தது 1 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் தற்போது 10 ஆயிரம் ரூபாய் கூட எடுக்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

Updated On: 11 April 2021 3:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!