Begin typing your search above and press return to search.
அரூர்: தபால் வாக்கு செலுத்த அவகாசம் நீட்டிப்பு.!
தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பலர் இன்னும் தபால் வாக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. அப்போது தேர்தலில் பணியாற்றும் அரசு ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் வாக்கை செலுத்த தபால் வாக்கு வழங்கப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பலர் இன்னும் தபால் வாக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தபால் வாக்குகளை நிரப்பி வாக்கு செலுத்த மே 2ம் தேதி காலை 8 மணி வரை வழங்கலாம் என அரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருர், கோட்டாச்சியருமான முத்தையா தெரிவித்துள்ளார்.