/* */

ஊரைவிட்டு இளைஞர் தள்ளி வைப்பு: நடவடிக்கை எடுக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி

அரூர் அருகே ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விஷம் அருந்தி இளைஞர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஊரைவிட்டு இளைஞர் தள்ளி வைப்பு: நடவடிக்கை எடுக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி
X

பைல் படம்.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். விஜயகுமார் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதை அருகே வீடு கட்டியுள்ளார்.

இந்த வீடு பொதுப் பாதையில் சற்று ஆக்கிரமித்து கட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த புகாரில் கிராம மக்களுக்கும் விஜயகுமார் குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது கிராமத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை விஜயகுமார் கிராமத்தினரை அவமானப்படுத்தும் விதமாக பரிசுப் பொருளுடன் காலனியை கட்டி தெருவில் தொட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விஜயகுமாரை அழைத்து பஞ்சாயத்து பேசியுள்ளனர் அப்போது பஞ்சாயத்தார் பேச்சுக்கு அவர் கட்டுப்படவில்லை.

தொடர்ந்து ஊர் கட்டுபாட்டை மீறியதாக ஊர் தர்மகர்த்தா ராஜசேகர், ஊர்கவுண்டர் தவுரிசெல்வம் உள்ளிட்டோர் கட்டபஞ்சாயத்து செய்து விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்தனர். இதனால் விஜயகுமார் நடத்தி வரும் மளிகை கடையில் யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது.

அப்படி பொருட்கள் வாங்கினால் 500 ரூபாய் அபராதம் என தண்டுரா போட்டுள்ளனர். மேலும் மற்றும் இவர்களிடம் உறவினர்கள் யாரும் பேசக்கூடாது, கோயிலுக்கு செல்ல தடை, கிராமத்தில் பொது இடங்களில் வருவதற்கு தடை என ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபுகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து திங்கள்கிழமை அரூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விஜயகுமார் குடும்பத்தினர் மற்றும் இருதரப்பினரையும் வரவழைத்து காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை திருப்தியில்லாத விஜயகுமார் குடும்பத்தினர் உரியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

ஆனால் ஊரில் பல பேர் பல விதமாக பேசியதை கேட்ட விஜயகுமார், மனமுடைந்து இரவு 2 மணி அளவில் எலி பேஸ்ட் மருந்தை குடித்துவிட்டு, வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டார். இதனையறிந்த இவரது அண்ணன் சக்திவேல், உடனடியாக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால், விஜயகுமார் தற்கொலை முயற்சி செய்தார். எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து அரூர் வட்டாட்சியர் கனிமொழி, காவல் துறையினர் ஈட்டியம்பட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது விஜயகுமார் ஆக்கிரமித்து வீடுகட்டி இடம் குறித்து, நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வேண்டுமென்றே கிராமமக்களை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், விஜயகுமார் குடும்பத்தினர் செயல்படுவதாக கிராமமக்கள் வட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து இருதரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக வட்டாட்சியர் அழைத்துள்ளார். இரு தரப்பினரையும் விசாரணை செய்தபின், அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கவுள்ளார். இந்த சம்பவத்தால், அரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 27 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!