/* */

தருமபுரி: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் பூங்கா அமைப்பு

தருமபுரியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தருமபுரி: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் பூங்கா அமைப்பு
X

அதியமான்கோட்டையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.

தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், சுற்றுப்புற சூழல் மற்றும் வடகிழக்கு பருவமழை கருத்தில் கொண்டு, சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, பழைய தேசிய நெடுஞ்சாலை அதியமான்கோட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே, சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோட்டப் பொறியாளர் தனசேகரன், முதலாவது மரக்கன்றினை நட்டு வைத்தார். தொடர்ந்து உதவி கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், உதவிப் பொறியாளர் கிருபாகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இப்பணிகளை சாலை ஆய்வாளர்கள் அபிமன்னன், ரகமத்துல்லா, சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், சாலைப் பணியாளர்கள் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட செடிகளை நட்டனர். இதே போன்று சாலையோரம் ஆங்காங்கே 1000-க்கும் மேற்பட்ட செடிகள் நட்டு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!