/* */

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருட்டு : போலீசார் விசாரணை

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருட்டு : போலீசார் விசாரணை
X

தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருட்டு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி மாலினி வயது 19. நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 18ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

மாலினிக்கு நேற்று (19ஆம் தேதி) ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் மாலினி இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். உறவினர்கள் அருகில் இல்லாத நிலையில் பிறந்த ஆண் குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கழிவறையில் இருந்து வந்து பார்த்தபோது குழந்தை இல்லை.

அலறியடித்த மாலினி கதறி அழுதார். இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்தனர். பின் தர்மபுரி நகர போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தர்மபுரி டிஎஸ்பி அண்ணாதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை திருடுபோனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 20 Jun 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....